Tuesday, February 15, 2022

பொய்யேயாகிலும் புகுந்து திரிதல்!

அப்பாடா! இப்பத்தான் நம்ம நிலைக்கு இறங்கி வந்து வார்த்தை சொல்கிறார்கள் இந்த பூர்வாசாரியர்கள்!

அதாவது, கோயிலுக்கு போவது என்பது உண்மையாகவே நெஞ்சில் இல்லையென்றாலும், சும்மாவேனும் பொய்யாக அப்படிப் போகிறாற் போல் வெளித் தோற்றத்திற்கு ஆகவேனும் கோயிலுக்குப் போய் வருதல் என்பது நல்லதுதானாம். கடைசி காலத்தில் கார்யகரம் ஆகுமாம். கொஞ்சம் நிம்மதியாக இல்லை !

இவ்வாறு சொல்வது பராசர பட்டர். எந்த இடத்துல யாரிடம் இவ்வாறு கூறினார் என்று ஆதார பூர்வமாகச் சொல்லி விடுகிறேன். 

"நம்பி திருவழுதிவளநாடு தாஸர்க்கும், பிள்ளை திருநறையூர் அரையருக்கும் பட்டர் அருளிச் செய்த வார்த்தை:- உகந்தருளின நிலங்களிலே பொய்யேயாகிலும் புக்குப் புறப்பட்டுத் திரியவமையும்; அந்திம தசையிலே கார்யகரமாம்."

(வார்த்தாமாலை, 394)

***

No comments:

Post a Comment