Tuesday, November 18, 2014

Mamunivan Irupadhu 2

Mamunivan Irupadhu Verse 6

மாமுனிவன் இருபது வெண்பா 6

தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது.

The whole world has attained devotion to Thirumal and the fervent chants all around rise in tempo. Is it the buzzing of pure Tamil bees opening the stalks of the Shruthi blossoms, yea, the Flower of Paramapadam. what is that, who knows?

உலகம் வெப்பம் அடங்கித் தண்மை பெற்று விட்டது. உலகமெல்லாம் திருமாலுக்கே ஆகி சொந்த வீட்டை அடைந்த நிம்மதியின் மகிழ்ச்சி ஆரவாரம். இந்த ஒலி அதுவா? அல்லது சுருதி என்னும் வேதமாகிய செய்யமறை தன்னுடனே இசைந்து தமிழாகிய வண்டு செம்மாந்து மாந்திக் களிக்கின்ற அந்த விண்ணாட்டு ஒண்பூவானது அது என்ன? யார்க்குத் தெரியும்?

*

Mamunivan Irupadhu Verse 7

மாமுனிவன் இருபது வெண்பா 7

அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர்.

Rare indeed is the human birth in the world; rarer still to study all the fields of enlightenment; rare indeed is to become fully devoted to Sri Narayana; rarest of all is the excellence of Mamunivan.

உலகத்தில் கடவுள் பக்தி ஏற்படத்தக்க மானிடப் பிறவி மிகவும் அரிது; அவ்வாறு பிறந்து ஆன்மிக கலைகள் அத்தனையும் கற்றல் என்பது இன்னும் அரிது; அதனினும் அரிதே நாரணர்க்கு சேஷத்வம் பூண்டது இவ்வுயிர் என்னும் உணர்வில் நிலைநிற்றல்; இவையனைத்தினும் அரிதாகும் மாமுனிவனின் சீர்மை.

*

Mamunivan Irupadhu Verse 8

மாமுனிவன் இருபது வெண்பா 8

சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு.

Mamunivan presented Eedu commentary of Tiruvaimozhi to the Great Rich Man of Srirangam, garlanded by the precious arms of Ponni river. He is verily the same Yathiraja, of immense mercy like the pregnant clouds and of abounding grace, he hath come back.

வளங்கள் மிகும் பொன்னி நதி மாலையிடும் திருவரங்கச் செல்வர்க்கு உலகத்தை ஆன்மிக வளம் நிறைந்ததுவாய்ச் செய்யக் கூடிய ஈடு வியாக்கியானத்தை மாமுனிவன் அளித்தான். நிச்சயம் கார்மேகம் இந்த இடம் அந்த இடம் என்று பார்க்காமல் வள்ளன்மையோடு மழை பொழிவது போல எல்லோருக்கும் அருளைப் பொழியும் வண்ணம் அந்த மிகச் சிறந்த யதிராஜர்தாம் மீண்டும் வந்துவிட்டார் அன்றோ!

*

Mamunivan Irupadhu Verse 9

மாமுனிவன் இருபது வெண்பா 9

இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.

Let it be on this earth in this life or let it be anywhere else, even in ThiruNadu. Wherever we happen to be, if we but have the great Eedu. the solace and salvation for our souls, we will remain ever the desired enjoyment for Madhava (also Maa thava - the great renunciant, Yatiraja) by way of our ever shining knowledge and devotion defectless.

இங்கு இந்த நிலவுலக வாழ்க்கையில் ஆகட்டும் அல்லது அங்கு அல்லது எங்கோ அல்ல்து திருநாட்டிலேனும் ஆகட்டும் என்ன கவலை? ஈடு வியாக்கியானம் ஒன்று நம்முடன் இருக்குமேயானால், (நம்முயிர்க்குக் காப்பாகவும், கதியாகவும்,) பின்னர் குறைவுபடாத ஞனத்தாலும், குற்றமற்ற பக்தியாலும் நிறைந்து நாமே மாதவன் விரும்பி இன்புறும் ஜீவர்களாக ஆகி நிற்போம்.

*

Mamunivan Irupadhu Verse 10

மாமுனிவன் இருபது வெண்பா 10

பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம்
ஈருருவாய் வந்தவருள் மீண்டு.

Has the world been in the know of it, from the days of yore? That one Rama Anuja (brother of Rama, -Balarama) after the war and his ascension back to His Abode, though He has given the world the spiritual path through His Gita, He in His immense grace to make clear His own message will come back twice in the form of Ramanuja and Mamunivan?

உலகம் பண்டைக் காலம் தொட்டே அறிந்துதான் இருக்கிறதோ? குருக்ஷேத்திரத்தில் சண்டை நடத்தி முடித்த பிரான் அவனும் ஒரு ராம அனுஜன் அன்றோ? ராமானுஜன் தாம் உபதேசித்த கீதையின் ஒண்பொருளை மீண்டும் பாருக்கு விளக்க வேண்டி ராமானுஜ யதிராசராகவும், யதீந்த்ர பிரவணராகவும் அருள் கொண்டு வருவான் என்று உலகம் அறிந்தேதான் இருந்ததோ?

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

No comments:

Post a Comment